சேசுவின் மதுர திரு இருதயமே
சினேக அக்னி மயமே
தினமும் நீர் எங்கள்
சினேகமாய் இருப்பீர்
மனிதரை மோட்ச கதியிலே சேர்க்க
மனுமகனாய் பிறந்தாய்
மகிமைப்பிரதாப கடவுளானாலும்
மாபழிமேற்சுமந்தாய்
உன் திரு ரத்தம் ஒரு துளி முதலாய்
உனக்கென வையாயே
ஓய்வில்லா அன்பால் உன்னையே மறந்தாய்
ஓ திரு இருதயமே
என்னும் எம்மோடு இருந்தருள் ஈவாய்
இனிய நல் உணவானாய்
இவையெல்லாம் பாரா ஈனர்கள் நாங்கள்
இகழ்ந்தும்மைப் பழித்தோமே
கொடுமை செய்யூதர்
கடும் சிலுவைதனில்
அறைந்திட உயிர்துறந்தீர்
மடமை செய் மனிதர்
பயமன்றோ உம்மை
பலியிட ஆனதையா