அம்மாவும் நீயே அப்பாவும் நீயே...

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
(1)
பல்லுயிர்க்கும் உயிரளிக்கும் பரமன் நீயல்லோ
பல எண்ணில்லாத பொருளனைத்தும் படைப்போன் நீயல்லோ
அன்புடனே பாதம் அதை அண்டியே வந்தோம் – உன்
அமலத்திரு பாதமதில் சேர்ப்பாய் எம்மையே
(2)
எண்ணறியா நலமனைத்தும் படைப்போன் நீயல்லோ
எங்கள் யேசுவே உன் பெருமைதனை எண்ணலாகுமோ
முப்பொழுதும் நிறைந்தவனே முற்றுணர்வோனே – எங்கள்
தற்பரனே தயவுடனே காரும் எம்மையே
(3)
எங்கும் நிறை பொருளாக இருப்போன் நீயல்லோ – காணும்
எவ்வுயிர்க்கும் வாழ்வளிக்கும் ஈசன் நீயல்லோ
நீயல்லாது யார் துணையோ பூவில் யாவர்க்கும் – உம்
குளிர் நிழலை தந்தெம்மையே ஆள்வாய் நிதமே