மாசில்லாக் கன்னியே மாதாவே உன் மேல்
நேசமில்லாதவர் நீசரேயாவார்
வாழ்க வாழ்க வாழ்க மரியே
மூதாதை தாயார் செய் முற்பவமற்றாய்
ஆதியில்லாதோனை மாதே நீ பெற்றாய்
வாழ்க வாழ்க வாழ்க மரியே
தாயே நீ ஆனதால் தாபரித் தென்மேல்
நேசம் வைத்தாள்வது நின் கடனாமே
வாழ்க வாழ்க வாழ்க மரியே
|